தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோர் இலக்கிய பாசறைக்கு அழைக்கப்பட்டுள்ள கருத்தாளர்கள் அனைவருமே ஆண் ஆளுமைகளாக உள்ளனர். இதனை குறிப்பிட்டு, “எழுத்தாளர்கள் = ஆண்கள் மட்டும் என்று நம்பும் எவரும் எழுத்தாளராகவோ, வாசிப்பாளராகவோ இருக்க முடியாது” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நடிப்புக் கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா விமர்சித்துள்ளார்.