tamilnadu

img

தனித்தேர்வர்களாக 12 ஆம் வகுப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு 

12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதத் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டப் பிரிவின் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.  அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து, உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேர்வெழுத விண்ணப்பித்துள்ள மாற்றும் திறனாளி மாணவர்கள் விரும்பினால் தேர்வு எழுதலாம். விருப்பத்தின் அடிப்படையில் தேர்வெழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாகத் தங்களை அறிவிக்கும்படி கோர முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

;