tamilnadu

img

போர் முடியும் போது பாஜக சிதைக்கப்பட்டிருக்கும்; அதிமுக சிதறிப் போயிருக்கும்!

தமிழ்நாட்டில் 18வது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி, கூட்டணியின் அனைத்து தலைவர்களும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் தீக்கதிர் நாளிதழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.  அதில் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய திடீர் நேர்காணல், பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பம்மாத்து,  தேர்தல் களத்தில் எதிரணியினரின் விமர்சனங்கள், இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட எழுச்சி ஆகியவை குறித்து அவர் விரிவாக அலசுகிறார்.

தந்தி டிவி பேட்டியில் பாஜக அண்ணாமலையைப் பற்றி பேசும் போது சாதியவாதத்தை முன்னிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கே.பாலகிருஷ்ணன், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் உண்மை யிலேயே குற்றவாளியான சரத் சந்திர ரெட்டியை விடுவிப்பதற்காக 55 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலமாக  லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பாஜகவின் தலைவர் ஜே.பி.நட்டாவை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அவரது நேர்காணலின் அம்சங்கள்:

*பத்தாண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காத பிரதமர் நரேந்திர மோடி, திடீரென தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்துள்ளார். அதன் சூட்சுமம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று தந்தி டிவிக்கு விரிவான சிறப்பு நேர்காணல் அளித்திருக்கிறார். எப்போதுமே அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த தில்லை. அந்தப் பேட்டி முழுவதுமே தமிழ்நாட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளது. தமிழ்நாட்டு பண்பாட்டின் மீது, தமிழ் மொழி மீது, தமிழ்நாட்டு மக்கள் மீது மிகப்பெரிய அக்கறை உள்ளவர் போல  அவர் அந்தப் பேட்டியில் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ளார். இவ்வளவு நாட்களாக தமிழ்நாட்டு மக்கள் மீது பொங்காத பாசம் திடீரென்று தேர்தல் வரும் போது மட்டும் அவருக்கு பொங்கி வழிவது ஏனோ? தமிழ்நாடு வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பரிதவித்து நின்றபோது தமிழ் மக்கள் மீதான பாசம் மோடிக்கு எங்கே போனது?

*தமிழ்மொழி மீது பெரும் ஆர்வத்தை மோடி வெளிப்படுத்தியுள்ளாரே?
கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ்மொழிக்கு மோடி அரசு செய்தது என்ன? சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியில் பத்து சதவீதம் அளவிற்கு கூட தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு நீங்கள் ஒதுக்கியதில்லையே? உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி குழு வானது 112 பரிந்துரைகளை மொழி வளர்ச்சிக்காக அளித்திருக்கிறது. அதில் ஒன்று கூட தமிழ்மொழி வளர்ச்சி சம்பந்தமானது இல்லை. இவற்றில் பிரதான மாக இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்புக்கான பரிந்து ரைகளே உள்ளன. எனவே யாரை ஏமாற்றுவதற்காக தமிழ் மொழி மீது பாசம் உள்ளது போல தந்தி டிவியில் பிரதமர் பேட்டி தருகிறார்?

* ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் திடீரென்று புகழ்ந்து தள்ளுகிறாரே பிரதமர்?
பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடியும்,  தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரே பிரச்சனையில் மாறிமாறிப் பேசுகிறார்கள். அதிமுக வின் ஜெயலலிதா மிகப்பெரிய ஊழல் தலைவர் என்று  அண்ணாமலை விமர்சிக்கிறார். ஆனால் பிரதமர்  நரேந்திர மோடி ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் மகத்தான தலைவர்கள் என்று புகழ் பாடுகிறார். இதற்கு பெயர் பம்மாத்து, ஏமாற்று என்பதைத் தவிர வேறென்ன?

* பாஜக அண்ணாமலையை மோடி புகழ்ந்து தள்ளியுள்ளாரே?
அண்ணாமலையைப் பற்றி மோடி தமது பேட்டியில் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் நல்லவர், வல்லவர்  என்று மட்டுமல்ல; “நல்ல சமூகத்தைச்” சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். அப்படியானால் அண்ணாமலை யைத் தவிர மற்றவர்கள் எல்லாம் “கெட்ட” சமூ கத்தைச் சேர்ந்தவர்களா? ஒரு பிரதமரே சாதியை மையப்படுத்தி உயர்த்திப் பேசுவது, தமிழ்நாட்டில் உள்ள மற்ற சாதிகளைச் சேர்ந்த மக்களை இழிவு படுத்துவது ஆகாதா? அரசியல் சட்டத்திற்கு விரோத மாக பிரதமரே சாதிய ரீதியாக பேசுவதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கலாமா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

* தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்த நடவடிக்கைகள் அனைத்தும் அமலாக்கத்துறைதான் மேற்கொள்கிறதே தவிர, எங்கள் அரசுக்குச் சம்பந்தமில்லை என்று மோடி கூறியுள்ளாரே?

* தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்த நடவடிக்கைகள் அனைத்தும் அமலாக்கத்துறைதான் மேற்கொள்கிறதே தவிர, எங்கள் அரசுக்குச் சம்பந்தமில்லை என்று மோடி கூறியுள்ளாரே?

அரவிந்த் கெஜ்ரிவால் எந்த வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளாரோ அதே தில்லி அரசின் மதுபான விற்பனை  உரிமம் தொடர்பான வழக்கில் உண்மையான குற்ற வாளி யார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபரான சரத் சந்திர ரெட்டி அமலாக்கப் பிரிவால் விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு கைமாறாக அவர் பாஜகவுக்கு 55 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்களாக நிதி அளித்துள்ளார்.  இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள் ளது. அப்படியானால் சரத் சந்திர ரெட்டியிடம் 55 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்ற குற்றத்திற்காக பாஜக தலைவரான ஜே.பி.நட்டாவை மட்டும் ஏன் அமலாக்கத்துறை கைது செய்யவில்லை?

*பணமோசடித் தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ)வை பாஜக அரசு தவறாக பிரயோகிக்கிறது என்று எப்படிக் கூறுகிறீர்கள்?
உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் கெஜ்ரி வால் கைது செய்யப்பட்ட வழக்கில், பிஎம்எல்ஏ எனப் படும் ‘பண மோசடித் தடுப்புச் சட்ட’ விதிகளை கெஜ்ரி வால் அரசு மீறியுள்ளதாக அமலாக்கப் பிரிவு கூறு கிறது. அதன் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை களை மேற்கொண்டதாகச் சொல்கிறது. அந்தச் சட்டத் தில் மோசமான திருத்தங்களைக் கொண்டுவந்ததே மோடி அரசுதான். ஒருவர் மீது இந்த சட்டத்தின் கீழ்  குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால் அவருக்கு ஜாமீன் கூட கிடைக்காது; வழக்கின் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவர்தான் என்று முடிவுக்கு வந்த பின்னர்தான் ஜாமீன் தரலாம் என்று திருத்தம் செய்தது மோடி அரசு. 

குற்றமற்றவர் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் அந்த  வழக்கே முடிந்துவிடும். அதற்கு பிறகு ஜாமீன் கொடுப் பது என்ற பேச்சே எழவில்லை. எனவே இப்படிப்பட்ட ஒரு பிரிவைச் சேர்த்து அந்தச் சட்டத்தை திருத்தியது மோசடியானது. ஏற்கெனவே இந்த சட்டத்திருத்தத் தைக் கொண்டு வந்த போது, இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளு படி செய்துவிட்டது. அரசியல் சட்டத்தின் 14, 21ஆவது  பிரிவுகளுக்கு எதிராக இது உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் அதற்குப் பிறகும் மோடி அரசு அப்படி ஒரு சட்டத்திருத்தத்தை வலிந்து  மேற்கொண்டது. இந்தத் திருத்தம் முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் தான் கொண்டுவரப்பட்டது.

அதேபோல மத்திய குற்றப்புலனாய்வு கழகத்தை யும் மோடி அரசு இந்த நோக்கங்களுக்குத்தான் பயன் படுத்துகிறது. சிபிஐ என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த, தேசிய பாதுகாப்புச் சம்பந்தமான வழக்கு களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற தொனி யில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூட குட்டு வைத்துள்ளார்.

*தமிழ்நாட்டில் மட்டும் தான் மோடி எதிர்ப்பலை உள்ளதா?
மோடி  அரசு பல அராஜகங்களின் உச்சநிலைக்கு சென்றுள்ளது. அது இந்தத் தேர்தலில் நிச்சயம் அக்கட்சிக்கு கடும் எதிர்வினையை ஏற்படுத்தும். தமிழ்நாடு மட்டுமல்ல, வட இந்தியாவிலும் பல மாநி லங்களில் பாஜகவுக்கு மிகப்பெரும் தோல்வி காத்திருக் கிறது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். அத னால்தான் குஜராத் உட்பட பல மாநிலங்களில் பாஜக அறிவித்த வேட்பாளர்கள், நாங்கள் போட்டியிட வில்லை என்று கூறி வாபஸ் பெற்றுள்ளார்கள். ஓட்டம்  பிடிக்கிறார்கள். எனவே, மிகப்பெரிய அளவு மோடி எதிர்ப்பலை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

* பொருளாதார வளர்ச்சி தமது ஆட்சியில் உச்சநிலையை எட்டியிருப்பதாக மோடியும், பாஜகவினரும் பிரச்சாரம் செய்கிறார்களே? 
பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார வளர்ச்சி யில் இந்தியாவை உயர்நிலைக்கு கொண்டு சென்று விட்டதாக தனது பிரச்சாரங்களில் தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால் உலக பட்டினிக் குறியீட்டில் மொத்தமுள்ள 121 நாடுகளில் 111ஆவது இடத்திற்கு வீழ்ந்துள்ளது. பல மனிதவளக் குறியீடுகளில் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திற்கு அடுத்து இந்தியா  உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மக்கள் தொகையில் 32 சதவிகித மக்கள் ஊட்டச் சத்து குறைபாடுகளோடு வாழ்கின்றனர். 44 சதவிகித மக்களுக்கு சமையல் எரிவாயு கிட்டவில்லை. 41 சத விகித மக்களுக்கு போதுமான வீடுகள் இல்லை. தற்போதைய நிலவரப்படி மோடி ஆட்சியில் தானி யங்கள் 54 விழுக்காடு, இறைச்சி மற்றும் மீன் 73  விழுக்காடு, பால் பொருட்கள் 53 விழுக்காடு, காய்கறி கள் 48 விழுக்காடு என விலைவாசி உயர்வு விண்ணை  முட்டுகின்றது. சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் விலை 32 விழுக்காடு குறைந்துள்ள நிலை யில் உள்நாட்டில் 62 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுதான் மோடி அரசின் சாதனை. கடந்த 10 ஆண்டு காலத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய அரசின் கலால் வரியின் மூலம் ரூபாய் 28 லட்சம் கோடி கொள்ளையடித்தது இவர்கள் ஆட்சியில்தான்.

இவர்களது ஆட்சியில் வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது என்றால் 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? 2023 ஆம் ஆண்டு இறுதியில் வேலை யற்றோர் எண்ணிக்கை மூன்று கோடியை தாண்டி விட்டது. இவ்வாறு அடுக்கி கொண்டே போகலாம். பத்தாண்டு கால ஆட்சியில் பலன் அடைந்தவர்கள் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள்தான். இதன் விளை வாகவே உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரில்  அம்பானி, அதானி போன்றோர் இடம் பெற்றி ருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அதேபோல ஏழைகள் - பணக்காரர்கள் இடையி லான இடைவெளி இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்ல, மோடி ஆட்சியில் பெரும் கார்ப்பரேட்டுகள் மேலும் மேலும் செல்வ வளங்களை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  குறிப்பாக மோடி அரசின் கூட்டுக்களவாணி கார்ப்ப ரேட்டான அதானி நிறுவனம், மிகப்பெரும் கொள்ளை  லாபத்தை ஈட்டியிருக்கிறது. அநேகமாக இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அதானி நிறுவனம் ஆக்கிரமித்திருக்கிறது. நாட்டின் நுழைவாயில்களாக இருக்கக் கூடிய பல முக்கியத் துறைமுகங்கள் அதானியின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் போதை மருந்துகள் நுழைகிறது என்றால், அதானியின் துறைமுகங்கள் வழியாகத்தான் அவை வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

* துறைமுகங்களைப் பற்றிப் பேசும் போது, போதைப் பொருள் கடத்தல் பற்றிய கேள்வியும் எழுகிறதே? 
உண்மைதான். இன்றைக்கு அமலாக்கப் பிரிவு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பிரயோகிக்கும் ‘பண மோசடித் தடுப்புச் சட்டம்’ மிக முக்கியமானது. இச்சட்டம் கொண்டுவரப்பட்டதே, உலகளாவிய முறை யில் போதைப் பொருள் கடத்தலில் பெருமளவு பணப் பரிமாற்றம் நடக்கிறது, அதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான். போதைப் பொருள் கடத்தல் என்பது உலகளாவிய போட்டிப் பொருளாதாரமாக இருக்கிறது என்பதை உணர்ந்துதான் ஐக்கிய நாடுகள் சபையே உலக நாடுகளை அழைத்து சிறப்பு மாநாடு நடத்தி, போதைப் பொருள் தடுப்பு மற்றும் அத்துடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனை தடுப்புக்காக சிறப்புச் சட்டம் இயற்றுமாறு கூறியது. அந்த அடிப்படை யில்தான் பணமோசடித் தடுப்புச் சட்டமே இயற்றப்பட்டது.

வழக்கமான லஞ்ச ஊழல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தக் குறிப்பிட்ட சட்டமானது, போதைப் பொருள் பரவல் தடுப்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு என்பதை மட்டுமே பிரதான நோக்க மாகக் கொண்டு இயற்றப்பட்டது. ஆனால் இந்தியா வில் இன்றைக்கு பெரிய அளவிற்கு போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது. அந்த போதைப் பொருள் முழுவதும் அதானி துறைமுகங்கள் வழியாகத்தான் நாட்டிற்குள் நுழைகிறது. ஏன் மேற்கண்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம் அதானி நிறுவனங்கள் மீது பாயவில்லை? ஏன் அமலாக்கப்பிரிவும்  ஒன்றிய அரசின் மற்ற விசாரணை அமைப்புகளும் அதானி துறைமுகங்களில் சோதனை நடத்தவில்லை?

* திடீரென பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், பாஜக அண்ணாமலையும் கச்சத்தீவு பிரச்சனையை எழுப்பியிருக்கிறார்களே?
இது திட்டமிட்டு எழுப்பப்பட்ட சர்ச்சையே ஆகும். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆதாயத்திற்காகவே இது எழுப்பப்படுகிறது. கடந்த பத்தாண்டு காலம் இப்பிரச்ச னை குறித்து எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து விட்டு இப்போது எழுப்புவது ஏன் என்ற கேள்வி எழு கிறது. இதுவரையிலும் இந்திய அரசுத் தரப்பிலிருந்து கச்சத்தீவு தொடர்பாக எந்தக் கோரிக்கையும் எங்களிடம் எழுப்பப்பட்டதில்லை என்று இலங்கை அமைச்சர் கூறுகிறார்.

எனவே, திடீரென்று இந்திய அரசின் பிரதமரே ஒரு  திரியை கொளுத்திப் போடுவது முற்றிலும் குறுகிய அர சியல் ஆதாயம் காணும் நோக்கம் கொண்டதே ஆகும். தேர்தலுக்காக எந்தப் பிரச்சனையை வேண்டுமானா லும் பயன்படுத்தலாம் என்ற மோசமான நிலைக்கு பாஜக சென்றுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தலில் பாஜக வுக்கு மக்களிடையே எந்த வரவேற்பும் பிடிமானமும் இல்லை என்ற நிலையில் இந்தப் பிரச்சனையைக்  கிளப்பியாவது ஆதாயம் தேட முடியுமா என்று பார்க்கிறார்கள்.

கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றி திடீரென்று அக்க றைப்பட்டு பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டு காலத்தில் மீனவர்கள் பிரச்சனையைப் பற்றி ஏதாவது பேசியதுண்டா? இலங்கை அரசு  தமிழக மீனவர்களை, இந்திய மீனவர்களை தொடர்ந்து நடுக்கடலில் கைது செய்கிறது; தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது. படகுகளை சேதப்படுத்துகிறது. வலைகளை அறுத்தெறிகிறது. இந்தப் பிரச்சனை களுக்கு நிரந்தரமான தீர்வுகாண்பதற்கு மோடி அரசு தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லையே, அது ஏன்?

2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அயல்துறை அமைச்சகம் 1974  மற்றும் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இறுதி செய்யப் பட்டது என இதனை நியாயப்படுத்தி பதில் கூறிவிட்டு இப் போது இப்பிரச்சனையை கிளப்புவதன் உள்நோக்கம் தேர்தலே தவிர, வேறல்ல என்பது தெளிவு.

* ‘அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி’ என்ற இந்தியா கூட்டணித் தலைவர்களின் விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி கோபப்படுகிறாரே!
எடப்பாடி பழனிசாமி, இப்போது கூட, தேர்தலுக்குப் பிறகு நாங்கள் மோடியை ஆதரிக்கமாட்டோம் என்று  சொல்ல மறுக்கிறார். மூன்று மாத காலம் முன்பு கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டார். மோடி தான் தொடர்ந்து பிரதமர் என்று பேசினார். அப்படிப் பட்டவர் திடீரென ஏன் பாஜகவிலிருந்து பிரிந்தார் என்ற மர்மம் தெரியவில்லை. அதற்கான விளக்கத்தை இதுவரையிலும் எடப்பாடி பழனிசாமியோ அதிமுக நிர்வாகிகளோ வெளியிடவில்லை. பாஜகவின் எந்தக் கொள்கையை அதிமுக எதிர்த்துள்ளது; மோடி அரசின் எந்த நிலைப்பாட்டை, எந்த நடவடிக்கையை அதிமுக எதிர்த்துள்ளது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

* ‘கூட்டணி தர்மத்துக்காக’ நாங்கள் எதையும் எதிர்க்கவில்லை என்கிறார் எடப்பாடி. இது நம்பும்படியாக உள்ளதா?
நாட்டையே பிளவுபடுத்துகிற - இஸ்லாமிய மக்களை - இலங்கைத் தமிழ் மக்களை நிராகரிக்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அதிமுக ஆதரவு டன்தானே நிறைவேறியது; அதை ஆதரித்ததை ‘கூட்டணி தர்மம்’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி தர்மம் என்ற பெயரில் குடியுரிமை திருத்தச்  சட்டம் போன்ற ஒரு கொலைகாரச் சட்டத்தையே ஆதரிப்பீர்களா? சக குடிமக்களை குடியுரிமை அற்ற வர்களாக மாற்றுகிற ஒரு கொடிய சட்டத்தை ஆதரித்து விட்டு இப்போது மக்களிடம் ஓட்டு கேட்டு வந்தால் மக்கள் எப்படி ஏற்பார்கள்?

அதுமட்டுமல்ல; பாஜகவின் மதவெறி அரசியலை அதிமுக எதிர்த்திருக்கிறதா? ராமர் கோவில் கட்டி அதை மத - அரசியல் விழாவாக மாற்றியதை எதிர்த்திருக்கிறதா? அல்லது நாட்டின் பிரதமரே அங்கு சென்று பூசாரி வேலையில் ஈடுபட்டது சட்டப்படி தவறு என்று எதிர்த்திருக்கிறதா?  இந்தியா வின் பன்முகத்தன்மையை பாஜக சீர்குலைத்து வருவதை எதிர்த்திருக்கிறதா? மதச்சார்பின்மைக்கு பாஜக அரசு தொடர்ந்து ஆபத்தை விளைவித்து வருகிறதே, அதை எதிர்த்திருக்கிறதா? அதேபோல குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்ததா?

ஜம்மு - காஷ்மீரை இரண்டாக உடைத்தார்களே, அப்போது அதிமுக என்ன செய்து கொண்டிருந் தது? அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி யிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் ரத்து செய்தார்களே, அந்த மாநிலத்தின் அந்தஸ்தை குறைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத் தார்களே - அப்போதெல்லாம் அதிமுக என்ன  செய்து கொண்டிருந்தது? இப்போதும் கூட அந்த மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. சட்ட மன்றத் தேர்தலும் இப்போது வரை நடக்கவில்லை. 370ஆவது பிரிவை ரத்து செய்தது சரியானதுதான் என்றால், அதை அந்த மக்கள் முழுமையாக ஏற்றுக்  கொண்டார்கள் என்று பாஜக சொல்வது உண்மை யானால் - அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டியதுதானே? இதுபற்றியெல்லாம் அதி முகவின் நிலைபாடு என்ன? 370ஆவது பிரிவை ரத்து  செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், நாளை இந்தியாவில் எந்த மாநி லத்தையும் உடைக்கவும், அதன் அந்தஸ்தைக் குறைக்கவும் மோடி அரசால் செய்ய முடியுமே, இதைப் பற்றியெல்லாம் அதிமுகவின் நிலைபாடு என்ன?

இந்த நிலையில்தான் அதிமுக சார்பில் நிறுத்தப் பட்டுள்ள வேட்பாளர் மருத்துவர் சரவணன், திடீ ரென்று ஒரு பைனாகுலரை காட்டி அதன் வழியாக சு.வெங்கடேசனின் சாதனைகளைப் பார்க்க முயன்ற தாகவும், தனது கண்களுக்கு எதுவும் தெரியவில்லை  என்றும் பேசியிருக்கிறார். பைனாகுலரில் பார்த்தாலும் முதலில் கண் பார்வை தெளிவாக இருந்தால் தான் எது வும் தெரியும் என்பதை அவருக்கு சொல்ல வேண்டியிருக் கிறது. பைனாகுலர் அல்ல, காமாலைக் கண் உள்ள வர்களுக்கு பயாஸ்கோப் வைத்து பார்த்தாலும் சு.வெங்கடேசனின் சாதனைகள் தெரியப்போவ தில்லை. தமிழ்நாட்டிற்கே, ஏன் இந்தியாவிற்கே தெரி கிற; தமிழக மக்கள் எல்லோரும் பாராட்டுகிற பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசனின் சாதனைகளைப் பற்றி வேட் பாளர் சரவணனுக்கு சந்தேகம் இருக்குமாயின் 3 மாதங் களுக்கு முன்னால் சு.வெங்கடேசனின் சாதனையை பாராட்டி பேட்டி அளித்த செல்லூர் ராஜு அவர்களிட மிருந்தே விளக்கம் பெற்றுக்கொள்வது நல்லது.

* தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமையேற்றுள்ளது. திமுக அரசு தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று, எதிரணியினர் பிரச்சாரம் செய்கிறார்களே?
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிகவும் எழுச்சியோடு தேர்தல் களத்தில் நிற் கிறது. இந்த நிலையில் எதிரணியினரின் பிரச்சாரத்தில் திமுக அரசு இன்னும் தனது பல வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்று குற்றச்சாட்டு வைக்க முனை கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு இணக்கமான முறையில் கொடுக்க வேண்டிய நிதியை முறையாக கொடுத்திருந்தால், திமுக அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகளை இன்னும் கூட சிறப்பாக நிறைவேற்ற முடியும். ஆனால் ஒன்றிய அரசு  முழுக்க முழுக்க தமிழ்நாட்டை, அதன் பொருளா தாரத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. மாநிலத்திற்குரிய நிதிப் பகிர்வை முறையாக அளிக்க மறுக்கிறது. எவ்வளவு பெரிய வெள்ளச்சேதம் ஏற்பட்ட போதிலும், ஒரு பைசா கூட நிதி அளிக்கவில்லை. மிகப்பெரும் அளவிற்கு தமிழ்நாட்டை பழிவாங்கியுள்ளது மோடி அரசு. பாஜக  அரசின் இந்தப் பொருளாதாரத் தாக்குதலை எதிர்த்து நிற்க வேண்டிய நிலை தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டுள் ளது. அதையும் மீறி பல திட்டங்களை சிறப்பாக திமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்றே சொல்லலாம். நெருக்கடியான நிதி நிலைமையிலும் கூட மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்துப் பயணம், அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்ற மிக முக்கியத் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப் பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் எல்லாம் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளன. சமூக வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

நிச்சயமாக இதர பல வாக்குறுதிகளையும் திமுக  அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தத் திட்டங்கள்  அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியும், அத்திட்டங்களை நிறை வேற்றுவதற்கு உரிய முறையில் தமிழ்நாடு அரசை வற்புறுத்தும். மக்களின் எதிர்பார்ப்புகளை  அரசுக்கு சுட்டிக்காட்டும்.

அதேபோல திமுக அரசு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்சார ஊழியர்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை தேர்த லுக்குப் பிறகு நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கூறி யிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது பிரச்சாரத்தில் இதை தெரிவித்து வருகிறார்.

அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் மற்ற பகுதி தொழிலாளர்களும் மறுக்க முடியாத, பிரிக்க முடியாத அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் இன்றைக்கு ஓய்வூதியம் உள்பட எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டுமென கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக வலியுறுத்தி வந்தது. எதிர்காலத்திலும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாத்திட தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உறுதியாக வற்புறுத்தும் என்பதில் அணு அளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. அதேசமயம், தற்போது நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் என்ற அடிப்படையில் இந்திய நாட்டையே நாசக ரப் பாதையில் வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசை  அப்புறப்படுத்தி மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைப்பதற்கான இந்தியா கூட்டணியில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் இணைந்து செயல்படு வது தேச நலன் காக்கும் கடமையாகும்.

*திமுக அரசின் மக்கள்நலத்திட்டங்கள், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
நிச்சயமாக. நிதி ரீதியாக பல தாக்குதல்களை தொடுத்த போதிலும் கூட திமுக அரசு உறுதியாக தனது  திட்டங்களை செயல்படுத்துவதுதான் மோடி அரசின்  தூக்கத்தைக் கெடுத்துள்ளது என்பதுதான் உண்மை. இத்திட்டங்களின் அமலாக்கம் மூலமாக மக்களின் ஆத ரவைத் திரட்டியிருப்பது - தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற சூழலை உருவாக்கியிருப்பது - இதெல் லாம்தான் பிரதமர் நரேந்திர மோடியை நிலைகுலையச் செய்கிறது. அதனால்தான் அவர் தமிழக மக்களோடு மிக நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் தமிழ்நாட்டு டிவிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

* பல தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். கள நிலவரம் எப்படி உள்ளது?
தமிழ்நாட்டில் வேறு எந்தத் தேர்தலையும் விட  இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிக வலுவான முறையில் களம் காண்கிறது. ஒரு யுத்தத்தில் தளபதி கள் எல்லாம் வியூகம் வகுத்து, ஒன்றுபட்டு போரிடுவது போல இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து களமிறங்கி யுள்ளது. எனவே நிச்சயமாக எதிரணிகள் சிதறி சின்னா பின்னமாவது உறுதி. இந்தத் தேர்தலோடு பாஜக எனும் மதவெறி சக்தி தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் துடைத் தெறியப்படும் என்ற நிலை உருவாவது உறுதி.  அவர்கள் எந்தத் தொகுதியிலும் டெபாசிட் கூட பெற  முடியாத நிலை உருவாகும். பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற கபட நாடகம் நடத்தும் அதிமுகவுக்கும் மக்கள் உரிய பதிலடி கொடுப் பார்கள். ஏற்கனவே சிதறுண்டு போயுள்ள அதிமுக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேலும் சின்னாபின்ன மடைவது தவிர்க்க முடியாததாகும்.