tamilnadu

img

அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.சி.எப். தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐ.சி.எப். பொது மேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் மண்டலச் செயலாளர் பி.மோகன்தாஸ் தலைமை தாங்கினார். இதில் ஐ.சி.எப். யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியனின் சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் ப.ராஜாராமன்,  ராஜேந்திரன் (ஏ.ஐ.டி.யு.சி), எஸ்.கே.சுகுமார் (என்.பி.ஐ.ஆர்), மணிவண்ணன் (தொமுச), கோபிநாத், மங்கராமன், மனோகரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.