tamilnadu

img

12 மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை

சென்னை, ஏப்.2- தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட் டங்களில் கோடை வெயில் கொளுத்துகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக் கல், திருச்சி, கரூர், திண்டுக் கல், மதுரை ஆகிய 12 மாவட் டங்களிலும் பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். வெயில் 98.6 டிகிரி வரை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.

;