சென்னை, பிப்.25- தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் நல்ல உடன்பாடு ஏற் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் கூறினார்.
திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பி னர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினரு டன் ஞாயிறன்று (பிப். 25) அறிவா லயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், க.கனகராஜ் ஆகியோர் கொண்ட குழு பேச்சு வார்த்தை நடத்தியது.
இதன்பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய பி.சம்பத், “திமுக பேச்சுவார்த்தைக் குழுவோடு பேசி னோம். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. இணக்கமாக இருந்தது. இரண்டு தரப்பும் மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டியுள்ளது. விரைவில் நல்ல உடன்பாடு வரும்” என்றார்.