22 மாதங்களுக்கு பிறகு மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் திறப்பு
அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்தினர்
விழுப்புரம், ஏப்.17- விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்கு பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். விழுப்புரம் மாவட்டம், வட்டம், மேல்பாதி கிராமத்தில் பழமையான திரவு பதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு மற்றொரு தரப்பான ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அப்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது, அதனால் பிரச்சனைகுரிய அந்த கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலில் அனைத்து தரப்பு மக்க ளும் சாமி தரிசனம் செய்ய லாம் என்றும் கோவிலைச் சுற்றி சிசிடிவி கேமராக் களை பொருத்தி கண்காணிக்க வும் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் வியாழ னன்று (ஏப்.17) திறக்கப் பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கோவில் திறக்கப் பட்டதால் ஏராளமான பட்டி யல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு செய்த னர். இதனால் பட்டியலின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். அப்பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பட்டியிலின மக்கள் சாமி தரிசனம் செய்ய கூடாது என ஆதிக்க தரப்பு மக்கள் பெரும் திரளாக கூடி எதிர்ப்பு தெரிவித்தனர், அதனால் பரபரப்பும் பதட்டமான சூழ்நிலை யும் ஏற்பட்டது. இதை யடுத்து தொடர்ந்து போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.