tamilnadu

திருப்போரூரில் மலிவு விலை வீட்டுவசதி திட்டம் துவக்கம்

சென்னை, ஏப். 26-‘வான் மேகம்’ மற்றும் ‘மண் வாசனை’ என்ற இரு வீட்டு வசதி திட்டங்களை முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான அக்ஷயா அறிவித்துள்ளது.இந்த குடியிருப்புகள் ரூ.10.99 லட்சம் என்ற விலையிலிருந்து தொடங்குகிறது. ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலை குடியிருப்பு வீடுகள் துறையில் இந்நிறுவனம் கால்பதித்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் தனது 158வது மற்றும் 159 வது கட்டுமான செயல்திட்டங்கள் தொடங்கப்படுவதை அக்ஷயா அறிவித்துள்ளது. அரசு மட்டுமல்லாது, தனியார் துறையிலிருந்தும் பல்வேறு உத்தேச திட்டங்கள் இப்பகுதியில் மேற்கொள்ளப்படுவதால் நீண்டகால அடிப்படையில் செய்யப்படும் முதலீடு மீது நல்ல பலன்கள் கிடைக்கும் என்று அக்ஷயா நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. முறையே, 130 மற்றும் 312 குடியிருப்புகளை கொண்டிருக்கும் வான் மேகம் மற்றும் மண் வாசனை ஆகிய திட்டங்கள் 461 சதுர அடியிலிருந்து, 778 சதுரஅடி வரை சூப்பர் பில்ட்-அப் பரப்பினை கொண்ட ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகளை கொண்ட வீடுகள் ஆகும்.

;