tamilnadu

img

வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் குறித்து ஆலோசனை ....

சென்னை:
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஜூலை 4 ஞாயிறன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டமன்றக்  கூட்டத்தொட ரின் ஆளுநர் உரையிலும் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வேளாண் துறைக்கும் தனி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு  தயாராகும் வகையில் தலைமைசெயலாளர் இறையன்பு தலைமையில் ஞாயிறன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வேளாண், உணவு, கால்நடை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விளைப்பொருட்களுக்கான சந்தை வசதியை முறைப் படுத்துதல், லாபகரமான விலைக்கு உத்தரவாதம், மகசூல் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதி, பாரம்பரிய விவசாய முறைகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

;