கடலூர், ஜூலை 28- கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருகொளஞ்சி யப்பர் அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளம் அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதி யியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், இளங்கலைப் பிரிவில் தமிழ், ஆங்கி லம், வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவி யல் ஆகிய பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு சேர்க்கை நடைபெறுகிறது. இப்பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோர் www. tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணைய தளம் வழியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க லாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாண வர்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையம் மூலம் உரிய கட்டணங்களை செலுத்தியும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.