விழுப்புரம்,ஜன.29- பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு (ஜன.31) ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2021, பிப்ரவரி அன்று அப்போதைய முதல்வர் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவு களின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை (ஏக காலம்) விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு, ஜூன் 16 அன்று வழங்கியது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தில் ராஜேஷ் தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை (ஜன.23) விசா ரணைக்கு வந்தது.
விசாரணையைத் தடுக்கும் வகையில் மனு இருப்பதாக கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளு படி செய்து, பிப்ரவரி 23க்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என உத்தர விட்டது. இதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (ஜன.29) ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜரானார்.
அப்போது முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, இந்த வழக்கில் உங்கள் தரப்பு வாதங்களை ஜனவரி 31 அன்று எடுத்து வைக்க வேண்டும். அன்று வாதத்தை எடுத்து வைக்கவில்லை எனில், பிப்ரவரி 3 தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி உத்தரவிட்டார்.