உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு
சென்னை, ஜூலை 22- அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறி விப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவித்தி ருந்தது. அதன்படி கடந்த மார்ச் 28 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை விண் ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேர்வு நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசுக் கலை, அறி வியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசி ரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் அரசுக் கலை- அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஆகஸ்ட் 4 அன்று நடைபெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப் படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.-ல் அரசு ஊழியர்
அதிமுக மூத்த நிர்வாகி எதிர்ப்பு
சென்னை, ஜூலை 22- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து ஒன்றிய அரசு ஊழியர்கள் பணியாற்றலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவ ருமான திண்டுக்கல் சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் எந்த கட்சியும் எந்த மதத்தையும் சாராமல் பணிபுரிய வேண்டும். ஒரு மதத்தை வளர்க்கக் கூடிய சூழ்நிலையாக இருக்கும்; இது சரியான முறை அல்ல என்று திண்டுக்கல் கொத்தம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூலை 22- தமிழகத்தில் ஜூலை 27 ஆம் தேதி வரை மழை தொட ரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதோடு, அவ்வப்போது கனமழையும் பெய்கிறது. பருவமழை தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் இந்த மழை தொட ரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மேற்கு திசை காற் றின் வேகமாறுபாடு காரண மாக, 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான நாட்க ளில் தமிழகத்தில் ஓரிரு இடங் களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓர ளவு மேகமூட்டத்துடன் காணப் படும்.
கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தமி ழக கடலோர பகுதிகளில் 25 ஆம்தேதி வரை மன்னார் வளை குடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதி கள் மற்றும் குமரிக்கடல் பகுதி களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையி டையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 25 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீன வர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி ரேசன் கடைகளில் விரைவில் இலவச அரிசி
முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி, ஜூலை 22- புதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 22 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப் பில் முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில், “பள்ளிகளில் மாலையில் சிறுதானிய உண வும், காலையில் ரொட்டி பால் தருகிறோம். முன்பு பழம் தந்தோம். தற்போது பழம் தரும் எண்ணம் உள்ளது. சிறுதானிய உணவுடன் கடலை மாலையில் தர எண்ணம் உள்ளது. அரசு மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து தர நடவடிக்கை எடுத்து வரு கிறோம்.
இலவச அரிசி ரேசன்கடைகளில் விரைவில்
வழங்கப்படும். சொன்னதுபோல் தருவோம். கூடுதலாக மானிய விலையில் பருப்பு, எண் ணெய் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியுள்ளோம். அரிசி டெண்டர் போட்டுத்தான் தரமுடியும்.
அதன் பிறகு தெரிவிக்க முடியும். ரேசன் கடை கள் மூலம் கூட்டுறவுத் துறை டான்பெட் மூலம் தரவும் திட்டமிட்டுள்ளோம். சுகாதாரத் துறை யானது நிபா வைரஸ் வேறு மாநிலத்தில் இருந்து புதுச்சேரியில் பரவாமல் தடுக்க நடவ டிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.
நீலகிரியை தாக்கிய சூறாவளிக்காற்று
உதகை, ஜூலை 22- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரத்தால் கடந்த ஒரு வார மாக கனமழை பெய்து வந்தது. மழை யுடன் இடைவிடாமல் சூறாவளி காற்று வீசியதால் உதகை குந்தா ,கூடலூர், பந்த லூர் ஆகிய தாலுகாக்களில், பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகள் இடிந்ததுடன் மண் சரிவுகள் ஏற்பட்ட தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக் கப்பட்டது. இடைவிடாமல் பலத்த காற்று வீசி வருகிறது. அவ்வப்போது சில பகு திகளில் மழையும் பெய்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதின்றம் அனுமதி
கரூர், ஜூலை 22- அதிமுகவைச் சேர்ந்த தமிழக போக்கு வரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் நில மோசடி வழக்கில் தொடர்புடைய அவரது ஆதர வாளர் பிரவீன் ஆகியோரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் திங்கள்கிழ மையன்று அனுமதி வழங்கி உத்தர விட்டது.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கரூர் பத்திரப்பதிவு சார்பதிவாளர் கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த 16 ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரையும், ஆதர வாளர் பிரவீனையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி யளிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீ ஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை கரூர் குற்றவியல் நீதி மன்றம் நடுவர் எண்-1 இல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், பிரவீனும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபி சிஐடி போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் இருவரையும் கரூரில் உள்ள அலுவல கத்திற்கு அழைத்துச் சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வேங்கைவயல் சம்பவம்
சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு
சென்னை, ஜூலை 22- வேங்கைவயல் சம்பவம் தொடர் பாக சிபிஐ விசாரணை கோரிய வழக் கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டிய லின மக்களுக்கான நீர்த்தேக்க தொட் டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவ காரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதி பதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழ மையன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, “கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கின் விசாரணை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்றப்பட்டது. உயர்நீதி மன்றமும் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. ஆனால் இதுநாள்வரை இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை,” என்று வாதிட்டார்.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்க றிஞர் ஜெ. ரவீந்திரன் கூறுகையில், “ஒரு நபர் ஆணையம் மற்றும் சிபி ஐடி தரப்பில் அவ்வப்போது அறிக் கைகள் தாக்கல் செய்யப்பட்டு வரு கிறது. தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள் ளது. எனவே, அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்,” என்று தெரி வித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கள், விசாரணையை அடுத்த வாரத் துக்கு ஒத்திவைத்தனர். மேலும், இதே விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வழக்கு
ஒன்றிய அரசை எதிர் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 22- சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘குற்ற வழக்குகளில் யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்து வதால் காவல் துறையினரின் புலன் விசா ரணை பாதிக்கப்படுகிறது. யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறை யும் இல்லாததால் பொது அமைதி பாதிக் கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப் படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறை களை வகுக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன்பு திங்களன்று நடைபெற்றது. அப்போது, யூடியூப் நிறுவனத்தையும், ஒன்றிய அரசை யும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரி வித்தார். இதையடுத்து, வழக்கில் ஒன்றிய அரசை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனு தாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.