சென்னை, மார்ச் 4 - கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாற்றுப் பாலினத்தவர்களின் எண்ணி க்கை குறித்த புள்ளிவிவரங்களை சேக ரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்குரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக் குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணே சன் என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் திங்க ளன்று மீண்டும் விசாரணைக்குவந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், உச்ச நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் மாற்றுப் பாலி னத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த கொள்கையை வகுக்க அரசு திட்டவட்டமாக உள்ள தாகவும், அதற்கு மூன்றாம் பாலி னத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தேவைப்படு கின்றன எனக் கூறி, அரசின் அறிக்கை யை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் மாற்றுப் பாலினத்தவர்களின் எண்ணி க்கை குறித்த எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்பதால், முதலில் அந்த புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண் டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது, சாதிச்சான்று அடிப் படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அதை தனி இட ஒதுக்கீடாக கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க இதுவே தக்க தருணம் என்பதால், இந்த நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அத்துடன், மாற்றுப் பாலினத்த வர்களுக்கு எத்தனை சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்து கொள்கை முடிவை எடுக்கவும் அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.