சிறப்பு குறைதீர் கூட்டத்தில் வந்த 1847 மனுக்கள் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் தகவல்
விருதுநகர், நவ.26- நிலம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் வந்த 1847 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விருது நகரில் நிலம் தொடர்பான சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், நிலம் எடுப்பு, ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல் மற்றும் மேல்முறை யீடு, பட்டா ரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா, நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 1847 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட் டாட்சியர், வட்டாட்சியர்களுக்கு இனம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதில் தெரிவித்துள்ளார்.
கஞ்சா விற்ற 4 பேர் கைது
சாத்தூர், நவ.26- சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் நகர் போலீசார் மேட்டமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்நத சிவசங்கர் (22), வெற்றிவேல்(20) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதேபோல்சிவகாசி நகர் போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முருகன் காலனியைச் சேர்ந்த சுடலைபாண்டி(25), தங்கராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதுகுளத்தூரில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம், நவ.26- இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக கிராம உதவியாளர்கள் சங் கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சாமி நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் வட்டார தலைவர் லிங்க வேல் அனைவரையும் வர வேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் தர்மன் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார். கிராம உதவியாளர்களுக்கு 4-ம் நிலைக்கு இணையான டி பிரிவு ஊதியம் வழங்க கோரியும், கிராம நிர்வாக அலுவலர்களாக 50% உட னடியாக பதவி உயர்வு வழங்கக்கோரியும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பொருளாளர் மாய கிருஷ்ணன் நன்றி கூறினார்.
கொடுத்த மனுவிற்கு ரசீது கோரி விருதுநகரில் கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்
விருதுநகர், நவ.26- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நிலம் தொடர்பாக மனு அளிக்க செவ்வாய்கிழமை ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆனால், அங்கு மனுக்களை பெற்று அதை முறையாக பதிவு செய்து ரசீது வழங்கிட குறைவான அலுவலர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மனுக்களை பெற்ற அலுவ லர்கள், அதற்கான ரசீதனை மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு வழங்கவில்லை. இதையடுத்து, ரசீதை பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மழை பெய்தது. கடுமையான மழையையும் பொருட்படுத்தா மல் ரசீதை பெறுவதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே காத்துக்கிடந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனவே, அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்பு, பொதுமக்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமா தானம் அடையாத பொதுமக்கள் அருகில் இருந்த 4 வழிச் சாலைக்கு சென்று மறியல் போராட்டம் நடத்தினர்.