ராஞ்சியில் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை, ஹவுரா - சிஎஸ்எம்டி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர். இந்த செய்தியைக் குறித்து முகநூலில் கருத்துப் பதிவிட்டுள்ள எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, “போகிறபோக்கைப் பார்த்தால், ரயில்வே கால அட்டவணையிலேயே.. அன்றாடம் நடக்கவிருக்கும் ரயில் விபத்துகளையும் சேர்த்துவிடுவார்கள் போல” என்று மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையை விமர்சித்துள்ளார்.