சென்னை, ஜூலை 28- ஏழை எளிய மக்கள் செலுத்தும் எல்ஐசி பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என பெண் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காப்பீட்டு ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2 இன் சார்பில் எல்ஐசி உழைக்கும் மகளிர் 28ஆவது மாநாடு வேப்பேரியில் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெற்றது. இணை அமைப்பாளர்கள் வி.அனுஜா, ஆர்.சிந்துஜா ஆகியோர் தலைமை தாங்கி னர். தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மகளிர் துணைக் குழு அமைப்பாளர் கே. துளசி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். ஜெனரல் இன்சூரன்ஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன் மகளிர் துணைக்குழு அமைப்பாளர் எஸ். ஷோபனா, லிகாய் அகில இந்திய மகிளா கமிட்டி உறுப்பி னர் ஒய். ரேணுகா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தியும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சர்வமங்களா நிறைவு செய்தும் பேசினர்.முன்னதாக லதா மகேஸ்வரி வர வேற்றார். இணை அமைப்பாளர் எஸ். எஸ். கீதா நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
எல் ஐ சி, ரயில்வே, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியார், கார்ப்பரேட் நிறுவன ங்களிடம் விற்பனை செய்யக் கூடாது, பாலிசிகள் மற்றும் சேவைகள் மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும், முயற்சிகளை கைவிட வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும், சாதி ஆணவக் கொலை களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
மகளிர் துணைக் குழு அமைப்பா ளராக கே.துளசி, இணை அமைப்பாளர் களாக ஆர்.சிந்துஜா, டி.லீலாவதி, டி.லதா மகேஸ்வரி, ஹரிப்பிரியா, விஜயலட்சுமி, புவனேஸ்வரி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.