கோடை வெயில்: சென்னையில் ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு
சென்னை, ஏப். 24- கோடை வெயில் எதிரொலியாக சென்னையில் ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங் களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானங்கள், பழங்கள், இளநீர், நுங்கு விற்பனை சூடு பிடித்துள் ளது. இந்நிலையில் தாகம் தணிக்கும் எளிய பானமாக மோர் உள்ளது. எனவே அதை ஏழை எளிய மக்கள் வாங்கி அருந்தி வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்கி றார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு தனி யார் நிறுவனங்கள் மோர் விற்பனை செய்தாலும், ஆவின் நிறுவனம் தயா ரிக்கும் மோருக்கு எப்போதும் ஒரு மவுசு உண்டு. ஆவின் நிறுவனம் வாயிலாக சுமார் 26 லட்சம் லிட்ட ருக்கு மேல் பால் கொள்முதல் செய்ய ப்படுகிறது. இவற்றின் மூலம் பால் மட்டுமின்றி தயிர், மோர், வெண்ணெய், இனிப்பு வகைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது.
பொதுவாக கோடை காலங்க ளில் மோர், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாகும். அந்த வகையில் ஆவின் மோர் விற்பனை அதிகரித் துள்ளது. 200 மில்லி ஆவின் மோர் பாட்டில் 12 ரூபாய்க்கும், 200 மில்லி ஆவின் மோர் பாக்கெட் 8 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்படுகிறது.
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மோர் பாட்டில் மற்றும் பேக்குகளில் அடைக்கப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 விழுக்காடு ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வீடு தெரியாமல் சுற்றித் திரிந்த சிறுவன்: போலீஸார் மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பு
அம்பத்தூர், ஏப்.24- பூந்தமல்லியில் வீடு தெரியாமல் மிதிவண்டியில் சுற்றி திரிந்த சிறுவனை காவல் துறையினர் மீட்டு தந்தை யிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
பூந்தமல்லி குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மிதிவண்டியில் வந்த 6 வயது சிறுவன், தனது வீட்டுக்கு வழி தெரியா மல் சுற்றி திரிந்தான். இதைப் பார்த்த ஆட்டோ ஓட்டு நர்கள் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது, தாத்தா என்ற வார்த்தையை தவிர வேறு எந்த சொல்லை யும் அவனால் சொல்ல தெரியவில்லை. மேலும் அந்த சிறுவனுக்கு வீடு இருக்கும் திசை தெரியாத தாலும், இருப்பிடத்தை சரியாக சொல்ல முடியாத தால், ஆட்டோ ஓட்டுநர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சிறுவனை அழைத்து இருப்பிடம் குறித்து விசா ரணை மேற்கொண்டனர்.இதற்கிடையில் பூந்த மல்லி அருகே காட்டுப்பாக்கம் ராமதாஸ் நகரைச் சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மகன் ரிசி வந்த் (6) என்பவரை காணவில்லை என காவல்துறை யில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. இதை யடுத்து காவல் துறையினர் ஜெகனை கைப் பேசி மூலம் தொடர்பு கொண்டு, சிறுவனின் அடையாளத்தை தெரிவித்தனர். அது அவரது மகன் என தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து ரிசிவந்தை அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்.
போட்டி தேர்வுகள் திருத்தப்பட்ட புதிய
அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
சென்னை, ஏப்,24- போட்டி தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, 6244 பணி யிடங்க ளுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது.
2030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் 8 நடைபெறுகிறது. குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறி விக்கப்பட்டுள்ளது. அதன்படி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 7ம் தேதி நடை பெறுகிறது.
தொடர்ந்து, 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி மற்றும குரூப் சி தேர்வு ஜூலை 12 நடைபெறுகிறது. 105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் , முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் பதவி) தேர்வு ஆகஸ்டு 11 நடைபெறுகிறது.
605 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் , முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் அல்லாத பதவி) தேர்வு அக்டோபர் 10 நடைபெறுகிறது. 730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில் நுட்ப சேவைகள் தேர்வு- டிப்ளமோ, ஐடிஐ நிலை தேர்வு நவம்பர் 17 நடைபெ றுகிறது. 50 பணியிடங்களுக்கான வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் கிரேடு 2 (முதன்மை) தேர்வு வரும் டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது.