சென்னை, ஜன. 8 - சிந்துவெளி நாகரிகம் குறித்த அறிவிப்பை ஜான் மார்ஷல் வெளி யிட்டதன் நூற்றாண்டை மாநிலம் முழுவதும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கொண்டாடும் என்று, அதன் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா அறிவித்துள்ளார். தமுஎகச சார்பில் கலை இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருது கள் வழங்கும் விழா ஞாயிறன்று (ஜன. 7) சென்னையில் நடை பெற்றது.
விருதுகள்
தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது ‘காவிரி நீரோவியம்’ நூலாசிரியர் சூர்யா சேவியர், நாவலுக்கான கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது ‘ஸலாம் அலைக்’ நூலாசிரியர் ஷோபாசக்தி, விளிம்பு நிலை மக்கள் குறித்த படைப்புக்கான சு.சமுத்திரம் நினைவு விருது ‘பங்குடி’ நூலாசிரி யர் க.மூர்த்தி, குழந்தைகள் இலக்கியத் திற்கான ராஜபாளையம் மணிமே கலை மன்றம் (கொ.மா.கோதண்டம்) விருது ‘பெரிய(ார்) தாத்தா’ நூலாசிரி யர் மோ.அருண் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மொழி வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது ‘செவ்வியல் இலக்கிய ஆய்வு: இடைச்சொற்கள் பதினெண் கீழ்க்கணக்கு’ நூலாசிரி யர் முனைவர் ஜா.கிரிஜா, குறும்படத் திற்கான பா.இராமச்சந்திரன் நினைவு விருது ‘அரிதாரம்’ படத்தின் இயக்கு நர் பி.சுரேஷ்குமார், ஆவணப்படத் திற்கு என்.பி.நல்லசிவம் - ரத்னம் நினைவு விருது ‘நொச்சிமுனை தர்ஹா’ பட இயக்குநர் ஆத்மா ஜாபிர், அல் புனைவுகள் இரா.நாகசுந்தரம் நினைவு விருது ‘வித்தி வான் நோக்கும் வியன்புலம்’ நூலாசிரியர் பெ.ரவீந்தி ரன் உள்ளிட்டோருக்கு வழங்கப் பட்டது. கவிதைத் தொகுப்புக்கு வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் - செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது ‘குருதி வழியும் பாடல்’ கவிதை நூலுக்காக கவிஞர் அ.சி.விஜி தரனுக்கும், சிறுகதை தொகுப்புக் கான அகிலா சேதுராமன் நினைவு விருது ‘நசீபு’ நூலாசிரியர் மு.அராபத் உமர், மொழி பெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது ‘ஆன்மிக அரசியல்’ நூலாசிரியர் இ.பா.சிந்தன், அமரர் மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி அம்மாள் நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது கலைமாமணி நாகு, மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு இசைச் சுடர் விருது மழையூர் சதாசிவம், முனைவர் த.பரசுராமன் நினைவு நாடகச் சுடர் விருது - பேரா.ராஜூ, மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு பெண் படைப்பாளுமை விருது புதியமாதவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விருதுகளுக்கு தேர்வு செய்யப் பட்ட நூல்கள் மற்றும் கலைஞர்கள் குறித்து தமுஎகச படைப்பாளிகள் ஆய்வுரை நிகழ்த்தினர். இந்த நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஹேமா வரவேற்றார். நிகழ்வுகளை துணைப் பொதுச் செயலாளர் பிரகதீஸ்வரன் ஒருங்கிணைத்தார். மாநிலப் பொருளாளர் சைதை ஜெ. நன்றி கூறினார்.
சிறப்பு அமர்வு
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அமர்வுக்கு சங்கத்தின் மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை தாங்கி, படைப் பாளிகளுக்கு விருதுகளை வழங்கி னார். முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதாளர் ஆர்.பாலகிருஷ்ணனின் படைப்புகள் குறித்து மூத்த தலைவர் ச.தமிழ்ச் செல்வன் பேசினார். அதனைத் தொடர்ந்து விருதாளர்களுக்கு, விருது களை தலைவர்கள் வழங்கினர்.
சு.வெங்கடேசன் எம்.பி.
இந்நிகழ்வில் பேசிய சு.வெங்கடே சன், நாடாளுமன்றத்திற்குள் அத்து மீறி இரண்டு பேர் நுழைந்தார்கள். அவர்களுக்கு நுழைவு சீட்டு கொடுத் தது பாஜக எம்.பி., என்ற தகவலோடு தான் முதலில் அந்த செய்தி வெளி யானது. அதை செய்தவர் டேனிஷ் அலி எம்.பி., அதை அவர் செய்யா மல் போயிருந்தால், மொத்த வரலாறும், கதையை வேறொன்றாக மாற்றி இருப்பார்கள்” என்றார்.
ஜனநாயகமும், சுதந்திரமும், கருத்தியலின் கழுத்தை நெறிக்கப் படுகிற சூழல் உள்ளது. தனிமனித, கருத்து சுதந்திரத்தின் கடைசி துளி ரத்தத்தையும் உறிஞ்சும் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கருத்தியல் பெரும்போரில் மேலும் வலிமை பெறுவதற்கு இந்த படைப்புகள் பேராயுதமாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
ஆதவன் தீட்சண்யா
சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரை யாற்றுகையில், “இந்தியாவின் வரலாற்றை மேற்கத்திய, மார்க்சிய செல்வாக்கு இல்லாத வகையில், இந்திய தன்மையுள்ளவாறு எழுத ஒன்றிய அரசு ஒரு குழு அமைத்துள் ளது”என்றார். ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள். சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என எழுத உள்ளனர்.
எனவே, சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடித்து குறித்த அறிவிப்பை 1924ஆம் ஆண்டு செப். 20 ஆம் தேதி ஜான் மார்ஷல் வெளியிட்டார். அந்த அறிவிப்பின் நூற்றாண்டை மாநிலம் முழுவதும், மாவட்டந்தோறும் தமுஎகச கொண்டா டும்.” என்றும் அவர் கூறினார்.