tamilnadu

வாகன விபத்தில் மாணவன் பலி

தாம்பரம், ஏப்.24-தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் பிரகாஷ் (18). 12ஆம் வகுப்பு முடித்து உள்ளார். இவர், தனது நண்பவர்களான மதுராந்தகத்தை சேர்ந்த எழிலரசன், அரவிந்தன் ஆகியோருடன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.கடப்பேரி பகுதி அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது வண்டலூரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசுப் பேருந்து திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.இதில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் எழிலரசன், அரவிந்தன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இது குறித்து குரோம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் தண்டையார்பேட்டையை சேர்ந்த பூபதியை கைது செய்தனர்.

;