கலைஞருக்கு திருவாரூரில் சிலை
சென்னை, ஜூன் 28 - திருவாரூர் ரவுண்டானாவில் கரு ணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின் போது திரு வாரூர் தொகுதி வாள வாய்க்கால் ரவுண்டா னாவில் கலைஞருக்கு சிலை நிறுவ அரசு முன் வருமா? என்று திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, “திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானா, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப் படும்” என்று கூறினார்.
அதேபோல், பொது இடத்திலோ, சாலைகளிலோ, சாலை ஓரத்திலோ சிலை வைப்பதற்கு தடை உள்ள கார ணத்தினால் தான் உடனடியாக அனுமதி வழங்க முடியவில்லை. அதற்கு ஏற்ற வாறு ஆராய்ந்து சிலை நகராட்சி அலு வலகத்தில் அமைக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
வடசென்னைக்கும் நூலகம் அறிவு சார் மையம்!
சென்னை, ஜூன் 28- சட்டமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, மாதவரம் தொகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன் வருமா? என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதி லளித்துப் பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கான வசதி உள்ள தோடு, முதலமைச்சரின் கனவுத் திட்ட மான நான் முதல்வன் திட்டத்திலும் அதிக ளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும், சென்னை, மதுரை, கோவை, திருச்சியைப் போல எதிர்காலத்தில் வட சென்னையிலும் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும்” என்றார்.