tamilnadu

img

குவைத்தில் உயிரிழந்த செஞ்சி இளைஞர்: உடலை சொந்த ஊர் கொண்டுவர வேண்டுகோள்

விழுப்புரம், ஜூன் 13- குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் உயிரி ழந்த நிலையில், அவரது  உடலை சொந்த ஊருக்கு  கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப் கடந்த 14 ஆண்டு களாக குவைத்தில் உள்ள மெட்டீரியல் ஸ்டீல் சில்வர்  கம்பெனியில் ஃபோர்மே னாக பணியாற்றி வந்துள் ளார். 

இந்த நிலையில், குவைத்  நாட்டின் மகாப் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அவரும் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தங்கி இருந்துள்ளார்.

குவைத் மருத்துவமனை யில் ஷெரீப் சிகிச்சை பெறும் புகைப்படம் சமூக  வலைதளங்களில் பரவி  வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அது முகமது  ஷெரீப்பின் புகைப்படம் அல்ல என மறுப்புத் தெரி வித்தனர். இதற்கிடையே, ஷெரீப் தங்கி இருந்த இடத்திலேயே உடல் கருகி  இறந்து போனார் என்ற தகவல் தற்போது வெளி யாகியுள்ளது.

இந்தச் செய்தியைக் கேட்டு ஷெரீப்பின் உற வினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஷெரீப்பின் உடலை உடனடியாக சென்னைக்கு கொண்டு வர  ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.