tamilnadu

img

ஒரு போராட்டத்தை மூன்றாக மாற்றிய காவல்துறை!

விழுப்புரம், செப்.13- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட பொம்மையார் பாளை யத்தில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக  வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் இலவசமாக வழங்க வலி யுறுத்தியும், கிரானைட், ஆற்று மணல், கனிம வள  கொள்ளைக்கு துணைபோ கும் வானூர் வட்டாட்சியரை கண்டித்தும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பொம்மையார் பாளையத்தில் செப்.13 வெள்ளியன்று ஆர்.சேகர் தலைமையில்  ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி, தமிழ்நாடு பார்  கவுன்சில் உறுப்பினர் ஏ. கோதண்டம், வட்டச் செய லாளர் ஜி.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் வி.அர்ச்சுணன், எம் கே.முருகன், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன  உரையாற்றிக் கொண்டிருந்த னர். அப்போது அங்கு வந்த  கோட்டக்குப்பம் காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கைது  செய்வதாக காவல்துறை யினர் மிரட்டியதை கண்டித்து  கிழக்கு கடற்கரை சாலையில்  அமர்ந்து திடீர் மறியலில் ஈடு பட்டனர். அப்போது அவர் களை கைது செய்து திருமண  மண்டபத்தில் அடைத்தனர். அங்கு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில்  வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், எம்.ராஜா ராம், ஏ.அன்சாரி, வி.சுந்தர மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். போலீ சாரின் கெடுபிடியால் ஒரு  போராட்டம் மூன்று போராட் டங்களாக மாறியது.