“நீட் ’விவகாரம் குறித்து பேச மாநிலங்களவையில் விதி 267 கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க மாநிலங்களவை அவைத் தலைவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தோம். ஆனால் அவா், ’குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசலாமே’ என்றார். அதில், சரியான பதிலும் விளக்கமும் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. பிரதமரும் அமைச்சரும் எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பாா்கள் என்று கூற முடியாது. ஒத்திவைப்பு தீா்மானத்தின் மூலமே ’நீட்’ தோ்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர முடியும் என்பதால், நாங்கள் அதை ஏற்கவில்லை!” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா குறிப்பிட்டுள்ளார்.