tamilnadu

img

சமூக நலத்துறை அமைச்சருடன் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர்கள் சந்திப்பு

சென்னை,பிப்.9- தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் தலைவர்கள், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக் கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகள் சார்பில் வழங் கப்படும் உதவித் தொகைக்காக விண்ணப்பித்து பல மாதங்க ளாக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் உடனே வழங்க வேண்டும். மேலும், அந்த தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்ட நாளி லிருந்து மூன்று மாதங்களுக்குள் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

மாவட்டங்களில் உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் யாரேனும் இறந்து  போகும் பட்சத்தில் அந்த தொகையை மாவட்ட அளவில் காத்திருப்போர் பட்டியில் உள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால தாமதமின்றி  உடனே வழங்க வேண்டும்.

தற்போது வருவாய் துறை  மூலம் பெற்று வரும் ரூ.1500 த்தை நிறுத்திவிட்டு அதற்கான சான்று பெற்று வர வற்புறுத்துவது என்பது மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் செயலாகும்.  இதற்கு மாறாக மாற்றுத்திறனாளி கள் நலத்துறை மூலம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கிய  பிறகு, தற்போது பெற்று வரும் ரூ. 1500-ஐ நிறுத்த வேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறி குடி பெயர்ந்து வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க கோருவதை தவிர்த்து அதற்கு பதிலாக அவர்கள் முகவரி மாற்றம் என்பதை  மட்டுமே ஏற்க செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், அடுத்த மூன்று மாதங்களுக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அதிகாரிகள் தரப்பில் துறை செயலாளர் எஸ்.நாகராஜன், இயக்குநர் எம்.லட்சுமி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணைச் செயலாளர் எம்.பிர சாத் ஆகியோர் உடனிருந்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர்  தோ.வில்சன், பொதுச்செய லாளர் பா.ஜான்சிராணி, பொரு ளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில நிர்வாகிகள் பாரதி அண்ணா, ஜீவா, பகத்சிங், ராதாகிருஷ்ணன், ரமேஷ் பாபு, குமார் கலந்து கொண்டனர்.