tamilnadu

இந்தியா கூட்டணி மோடியை புலம்ப விட்டுள்ளது சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு

அவிநாசி, மார்ச் 15- ராமர் கோவில் கட்டியாச்சு, கடலுக் கடியிலே சென்று பூஜை செஞ்சாச்சு, மீண்டும் ஜெயிச்சு விடுவார் என்று ஊடகங்கள் ஊதுகிறது. பொய்க்கு மேல் பொய்யாய்ப் பேசுகிற அளவிற்கு இந்தியா கூட்டணி மோடியை புலம்ப வைத்துவிட்டது என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் திருப்பூர் அவிநாசி கட்டடத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றி யம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட் பட்ட வஞ்சிபாளையம் பகுதி கிளை  அலுவலகம் திறப்பு விழா பொதுக் கூட்டம் சிஐடியு மாநிலக் குழு உறுப்பி னர் முத்துசாமி தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது.

இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்நிகழ்வில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகை யில், திருப்பூர் மாவட்டம் தொழில் மாவட்டம், இதன் அருகில் உள்ள மாவட்டங்களும், இந்திய ஜவுளியின் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கிற பகுதி. ஒன்றிய அரசின் தொழில் கொள்கை, ஜவுளித்தொழிலில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

 கடந்த பத்து ஆண்டுகளில் தொழி லை சிறு சிறிதாக நசுக்கியுள்ளது மோடி  அரசு. கார்ப்பரேட்டுகளுக்காக நமது தொழில்களை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு பேசும் போது ஒரு நபர் சொன்னார், விசைத்தறி யைக் கழற்றி விற்பனை செய்தால் அதற்கு ஒரு செலவாகும் என்று ஜேசிபி இயந்திரத்தின் மூலம் உடைத்து எடுத்து செல்லும் அவலம் இருப்பதாகத் தெரி வித்தார்.  இந்தியாவினுடைய பெருமை களில் ஒன்று, அரசாங்கம் ஒரு பொரு ளுக்கு விலை நிர்ணயிக்கும். இவை சோவியத் யூனியனிடம் இருந்து கற்றுக் கொண்டது. இதையெல்லாம் ஒழித்து கட்டிவிட்டார்கள். 15 ஆண்டுகளில் விவ சாயிகள் 10 ஏக்கர் முதல் 15 பேர்  வைத்திருப்பவர்கள் கார்ப்பரேட்டுகளு க்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

இன்றைக்கும், பொய்க்கு  மேல் பொய் பேசிக் கொண்டு வரு கிறார் மோடி. பலருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. ராமர் கோவில் கட்டி விட்டார், கடலுக்கடியில் சென்று பூஜை செய்கிறார், மீண்டும் ஜெயிச்சு விடுவார் என்று ஊடகங்கள் ஊதி பெரிதாக்கு கிறது.  இன்றைக்கு இந்தியா கூட்டணியில் 40 கட்சிகள் இணைந்து இருக்கின்றன. இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மோடியை புலம்ப விட்டுவிட்டனர். அதனால் குடியுரிமைச் சட்டத்தை தற் போது அமல்படுத்தியுள்ளனர். இந்தச் சட்டமே அவசியமற்றது. இந்தச் சட்டம் எதற்கு? நான் முஸ்லிம்களுக்கு எதிரான வன் என காட்டுவதற்கு தான். இவையெல் லாம் வாக்காக மாறும் என நினைக் கிறார்கள். இது ரத்த வெறி பிடித்த வர்கள் செய்யக்கூடிய வேலை. 

இந்தியா என்கின்ற மேல் தளம் பற்றி எரிந்து விடக்கூடாது என்பதற்காக மாநில கட்சிகளில் கருத்து வேறுபாடு கள், இருந்தாலும் இந்தியாவை பாது காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இந்தத் தேர்தல் நிச்சயம் அமைதியாக நடக்கும் நாம் வாக்கு செலுத்தும் போது அமை தியாக மோடிக்கு எதிரான வாக்கைச் செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை விட்டு விட்டோம் என்றால், அடுத்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை காப்பாற்றிக்கொள்ள, உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள உள்நாட்டுப் போர் நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.  

அரசியல் சட்டம் தலைகீழாக மாற்றப்படும். ஜனாதிபதி ஆட்சி, ஒற்றை  ஆட்சி முறை வந்துவிடும். இந்தியா  என்பது ஒன்றிய அரசல்ல ஒரு நாடு ஒரு  மொழி ஒரு கலாச்சாரம் என்பதெல்லாம் அமலுக்கு வந்துவிடும்.  இந்த அபாயத்தை உணர வேண் டும். வருகிற தேர்தலில் இந்தியா அணி யில் இருக்கக்கூடிய திராவிட முன்னே ற்றக் கழக அணி, இதில் இருக்கிற கூட்ட ணிக் கட்சிகளை வெற்றி பெற செய்ய வேண்டும், தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெற களப்பணியாற்ற வேண்டும் என்றார்.

முன்னதாக, நிகழ்வில், சிபிஎம்  மாநிலக் குழு உறுப்பினர் கே.காம ராஜ், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.