தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவு, இடதுசாரி இயக்கங் களுக்கு பேரிழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மிகவும் எளிமையானவர். தலை சிறந்த கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவையொட்டி இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 8,9) கட்சியின் செங் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டு மென கட்சி அணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மனைவிக்கும், மகனுக்கும், மேற்குவங்க மாநில தோழர்களுக்கும் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.