வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது
இந்த புயல் சின்னம் மேற்குவங்கம் மற்றும் அதனையொட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்தது.
தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில், மேற்கு வங்கத்திற்கும் வங்க தேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது.
இது மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக இன்று மாறும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.