tamilnadu

img

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்....

சென்னை:
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1. காவல் பயிற்சிக் கல்லூரி சிறப்பு டிஜிபியாக இருந்த ஷகீல் அக்தர், சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

2. சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி, காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. சிறப்பு அதிரடிப் படையின் (ஈரோடு) ஏடிஜிபியாக இருந்த எம்.ரவி, சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி, காலியாக இருந்த உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. தொழில்நுட்ப சேவைப் பிரிவின் டிஐஜியாக இருந்த ஆசையம்மாள், காலியாக இருந்த உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த அரவிந்தன், குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாக இருந்த சரவணன், குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 1 எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 2 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

;