tamilnadu

img

மேலும் 8 சிறப்பு ரயில்கள் நிறுத்தம்....

சென்னை:
கொரோனா 2-வது அலை தற்போது அதிகமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன் காரணமாக பயணிகள் வருகை குறைந்து வருகிறது.இதையடுத்து சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப் படுகின்றன. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 8 ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்ட்ரல்-ஆலப்புழாவுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02639), மங்களூர் சென்ட்ரல்- திருவனந்தபுரத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06630), எர்ணாகுளம் சந்திப்பு-காரைக்காலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06188).மதுரை-புனலூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06729), ஆகிய 4 சிறப்பு ரயில்கள் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டுள்ளன. ஆலப்புழா-சென்னை சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02640), திருவனந்தபுரம்- மங்களூர் சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06629), காரைக்கால் - எர்ணாகுளம் சந்திப்புக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06187).புனலூர்- மதுரைக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06730) ஆகிய சிறப்பு ரயில்கள் மே 16 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

;