tamilnadu

img

மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டில் இதுவரை 8 பேர் உயிரிழப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பெய்த கனமழையில் டிச.1 முதல் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல், தீவிரப் புயலாக வலுப்பெற்றது. கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது. தமிழ்நாடு தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கனமழையால்,  தமிழ்நாட்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒருவரும், செங்கல்பட்டில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை தகவல் தெரிவித்துள்ளது.