tamilnadu

img

7 ஆண்டு போராட்டம்- மாணவிக்கு ஆதரவாக நின்ற ஜனநாயக மாதர் சங்கம்

சென்னை,டிச.7- ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பல் கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய ஓய்வை உறுதி செய்து, உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் 2018 ஆம் ஆண்டு தனது துறையின் தலைவர் பேராசிரியர் கர்ண மகாராசா மீது  பாலியல் புகார் அளித்திருந்தார்.

இப் பிரச்சனையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டக்குழு உடனடி தலையீடு செய்தது. 

பல்கலைக்கழகத்தின் உள் புகார் கமிட்டி புகாரை விசாரித்த அடிப்படை யில்  குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப் பட்டது

எனவே அப் பேராசிரியருக்கு கட் டாய ஓய்வு அளித்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

2019 ஆம் ஆண்டு அந்த பேரா. கர்ணமகா ராசா தனது கட்டாய ஓய்வை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவரது கட்டாய ஓய்வை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட மாணவி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

மேலும் பல்கலைக்கழக பதிவாளர் சார்பிலும்  மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் கார்த்திகேயன், பூர்ணிமா அடங் கிய அமர்வு தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்தது.  மேலும் இந்த வழக்கு உத்தரவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும்  அக்கறையுடன் நீதிபதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

கல்வி நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதி கரித்த வண்ணம் உள்ளன. காரணம் கல்வி நிலையங்கள் ஆணாதிக்க சிந்தனை மிக்கதாக உள்ளன.

தங்கள் மீது பாலியல் துன்புறுத் தல் நடக்கும் போது அதை புகார்க ளாக அளித்தால் உரிய முறையில் விசாரிக்கப்படுமா என்ற தயக்கமும், பழி வாங்கப்படுவோமோ என்ற பயமும் தான் மாணவிகள்  இத்தகைய புகாரளிக்க முன்வராததற்கு முக்கிய காரணமாகும்.  எனவே பல்கலைக்கழகங்களில் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடைபெறாமல் தடுப்பது நிர்வா கத்தின் பொறுப்பு. வழக்கை விசாரித்த தனி நீதிபதி இப் பிரச்சனையின் தன்மையை முழு மையாக உணரவில்லை எனவும் இந்த  அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தவறிழைத்த தனி நீதிபதி

50 சதவீதம் குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்த தனிநீதிபதி, சிறிய அளவில் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக தெரிந்தாலும் குற்றச் சாட்டின் மீது தனிக் கவனம் செலுத்தி யிருக்க வேண்டும் .பாலியல் துன்புறுத் தலில் இருந்து அப்பெண்ணை பாது காத்திருக்க வேண்டும். 

அது நடக்காததால் அம்மாணவி பாதுகாப்பு கருதி வேறு கல்வி நிறுவ னத்தில் சேர்ந்தார்.தனி நீதிபதி தவறி ழைத்ததாக கருதுகிறோம் எனவும் இந்த அமர்வு கருதுகிறது.

மேலும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு  பேராசிரியர் ரூ.50 ஆயிரம்  வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணை பாலியல் துன் புறுத்தல் செய்த பேராசிரியரிடமி ருந்தே அபராத பணத்தைப் பெற்று அப்பெண்ணிற்கு கொடுப்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரு க்கு  நீதிமன்றம் அபராதத்தை விதிக்க லாம்.

 அரசு தீருதவி வழங்கிடுக

நீதிமன்றம் பெண்ணிற்கு அரசு தீருதவி வழங்குவதற்கு உத்தரவிட  வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும் இந்த உத்தரவை தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்ப பதி வுத்துறைக்கு இந்த அமர்வு உத்தர விட்டுள்ளது. காரணம், இதுபோன்று கல்வி நிலையங்களில் ஏற்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழி காட்டுதல்களை உருவாக்குவதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்றும் அந்த அமர்வு கூறியிருப்பது பாராட்டத் தக்கது.

இது போன்ற பல்வேறு வழக்குக ளின் உத்தரவுகள் பல வழக்குகளு க்கு  வழிகாட்டுதல்களை நீதிமன் றங்கள் உருவாக்குவதற்கு வழிவகை செய்யும். இந்த வழக்கில் 7 ஆண்டு கால மாக நீதிக்கான போராட்டத்தை நடத்திய ஆராய்ச்சி மாணவிக்கும், நீதிக்காக வாதாடிய மூத்த வழக்க றிஞர் வைகை அவர்களுக்கும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  பாரா ட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் நீதிமன்ற அமர்வு சுட்டிக் காட்டிய அடிப்படையில் பல்கலைக் கழகங்கள் மாணவிகளுக்கு பாதுகாப் பானதாக உள்ளதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பணியிடங்களில் பாலி யல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆரம்பக் கல்வி முதலே பாலின சமத்துவ பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும்  என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.

 உள் புகார் கமிட்டி விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் குற்ற வாளியை கைது செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அப்பெண் பல்வேறு மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட போதும் அப் பெண்ணுடன் நின்று வழக்கிற்கு உதவி  செய்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.