tamilnadu

img

ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள்  

அரசு போக்குவரத்து கழகங்களில், விரைவில் 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

சென்னை - அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிறைய காலியாக உள்ளன. அதாவது, ஒரு பேருந்துக்கு ஆறு பேர் என்ற விகிதத்தில் 1.28 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஐந்து பேருக்கும் குறைவாக உள்ளனர்.

முக்கியமாக ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறையால் பல பேருந்துகளை இயக்க முடியாத நிலை உள்ளது.  இது குறித்து ஓட்டுனர்கள் கூறியதாவது, போதுமான வருவாய் இல்லை என்ற காரணம் கூறி, பணியாளர்கள் நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.  

அடுத்த ஆண்டு மே மாதத்தில் 5,000 பேருக்கு மேல் ஓய்வு பெற உள்ளனர். அவர்களில் பலர் தற்போது விடுப்பில் உள்ளனர். இதனால், தொழிலாளர்களுக்கு உரிய விடுப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தற்போது தொழிலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  

மேலும், ஆளுங்கட்சி தொழிற் சங்கத்தினர், பேருந்து நிலையம், பண்டக சாலை உள்ளிட்டவற்றில் தேவைக்கு அதிகமாக பணியில் உள்ளனர். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றையும் சரி செய்தால் பேருந்து இயக்கம் பாதிக்கப்படாது என்று கூறினார்கள்.   

;