4 ஆண்டுகளில் 36,454 குழந்தை திருமணங்கள்
சென்னை, மே 9- தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு முதல் 2024 வரை 36 ஆயிரத்து 454 குழந்தை திருமணம் நடைபெற்றுள்ள தாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், குழந்தைகளின் கல்வி உள் ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகை யிலும், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. '
இதனிடையே, தகவல் அறியும் உரி மைச்சட்டம்-2005 இன் கீழ் சென்னையை சேர்ந்த சி.பிரபாகர் என்பவர் 2021 ஜன வரி முதல் பிப்ரவரி 2024 வரை தமிழ்நாடு முழுவதும் நடந்த குழந்தை திருமணங் கள் குறித்த விவரங்களை கேட்டிருந்தார்.
அதன்படி, 2021 ஆம் ஆண்டில் 14,331, 2022 ஆம் ஆண்டு 10,901, 2023 ஆம் ஆண்டு 9,565, மற்றும் 2024 ஆம் ஆண்டு (ஜனவரி முதல் பிப்ரவரி) வரைக்கும் 1,637 என மொத்தம் 36 ஆயிரத்து 454 குழந்தை திருமணங்கள் நடைபெற்றி ருப்பது தெரியவந்துள்ளது.
குரூப்-2 ஏ பதவிகளுக்கு ஜூன் 20 இல் கலந்தாய்வு
சென்னை, மே 9- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) 2022 ஆம் ஆண்டின் குரூப்-2 ஏ முதல் நிலை தேர்வு, அதே ஆண்டில் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு முதன்மை தேர்வு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ர வரி மாதம் நடந்தது. முதன்மை தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப் பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 8 ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், குரூப்-2 ஏ பதவி களில், நேர்முக எழுத்தர் மற்றும் சுருக்கெ ழுத்து தட்டச்சர் பதவி தவிர மற்ற பதவி களுக்கான அசல் சான்றிதழ்கள் சரி பார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 15 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 20 ஆம் தேதி வரையில் சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு இடஒதுக்கீடு, தரவரிசை மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்ப டையில் தற்காலிகமாக தேர்வு செய்யப் பட்டவர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பாணையை அதே இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
தென்சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது
சென்னை, மே 9- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சென்னை யில் உள்ள 3 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணிமேரி மகளிர் கல்லூரி, நுங்கம் பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக் கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத் தில் 2 சிசிடிவி கேமராக்களில் பழுது ஏற்பட்டுள்ளன. மொத்தம் 210 கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் பழுதாகியுள்ளன.
இதையடுத்து அதிகாரிகள் துரித மாக செயல்பட்டு, அவற்றை பணியா ளர்களை கொண்டு சீரமைக்கும் நட வடிக்கையை முன்னெடுத்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு சீரமைப்பு பணி கள் முழுமைப் பெற்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேம ராக்கள் பொருத்தப்பட்டன. இதை யடுத்து சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் வாக்கு எண் ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிறுவன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு முதல்வர் இரங்கல்
சென்னை, மே 9- நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடையை அடுத்த கருப்புக் கோடு பகுதியைச் சேர்ந்தவர் சி. வேலாயுதன் (73). 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பத்மநாபபுரம் தொகு தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர், மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.