tamilnadu

img

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு நடப்பாண்டிலேயே வழங்கப்படும் - ஒன்றிய அரசு

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதமான இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும், இதுகுறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்க வேண்டுமெனவும் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை அமல்படுத்தாத நிலையில், மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி இந்தாண்டுக்குள்ளாவது உத்தரவை நிறைவேற்றிட வற்புறுத்தினோம். அதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் ஒருவாரத்திற்குள் ஒன்றிய அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று ஒன்றிய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ இளங்கலை படிப்பிலும், முதுகலை படிப்பிலும், உயர்தனி வகுப்புகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு வழங்க  ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. 

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது எப்போது இந்த இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று நீதிமன்றம் சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு தற்போது பதிலளித்துள்ள ஒன்றிய அரசு, எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ்., டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படும்  என்று தெரிவித்துள்ளது. 

;