tamilnadu

கடலில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் மூழ்கி மாயம்

சென்னை, ஏப்.8- சென்னை, எண்ணூர், பாரத் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன், கவின் (17), ரவிக்குமார் (18), வம்சி (16), விபிக் (17) இவர்கள் அனைவரும் நண்பர்கள். இவர்களில்4 பேர் ஞாயிறன்று மதியம் கவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.அங்கு சாப்பிட்டுவிட்டு, 5 பேரும் எண்ணூர் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.இதில், கவின், தமிழரசன் ஆகியோரை திடீரென ராட்சதஅலை இழுத்துச் சென்றது. அவர்களை காப்பாற்ற ரவிக்குமார்,விபிக், வம்சி ஆகியோர் முயற்சித்தனர். ஆனால் இருவரையும் மீட்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இவர்களின்அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த பொது மக்கள், மீனவர்கள் சிலர் கடலில் குதித்து, ரவிக்குமார், விபிக், வம்சிஆகியோரை காப்பாற்றினர். ஆனால், கவின், தமிழரசு கடலுக்குள் மூழ்கி மாயமாகினர்.இருவரையும் மீனவர்கள் உதவியுடன், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

;