tamilnadu

img

2.75 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன.... தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை... பொது சுகாதாரத்துறை தகவல்....

சென்னை:
2.75 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமையன்று தமிழகத்துக்கு வந்துள்ளன. இதுவரை 71 லட்சம் டோஸ்தடுப்பூசிகள் வந்துள்ளன என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. தொற்றை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. போதுமான தடுப்பூசிகளை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும்என்று வலியுறுத்தப்பட்டது.தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடச் சென்றவர்களுக்குத் தடுப்பூசி பற்றாக்குறை எனும் நிலைஉருவானது. குறிப்பாக கோவாக்சின்தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது முன்பதிவுடன் வருபவர்களுக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையிலும் கோவாக்சின் தட்டுப்பாடு நிலவுகிறது.

சமீபத்தில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இரண்டு நாட்களுக்கு முன் 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் தமிழகம் வந்தன. பின்னர் ஏப்ரல்28 அன்று 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. இவை மாவட்ட வாரியாகப் பிரித்து வழங்கப்பட்டன. தமிழகத்துக்கு இதுவரை மொத்தமாக 68 லட்சத்து 25 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறையை நீக்கவும், மே 1 முதல் தொடங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவதற்காக கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்பதற்காகவும் 1.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த தடுப்பூசிகள்வராததால் மே 1 முதல் போடப்படுவதாக இருந்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் 2.75 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்  மே 4 அன்று தமிழகத்துக்கு வந்துள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்  கூறுகையில், ‘’ஹைதராபாத்திலிருந்து 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின்தடுப்பூசிகளும், மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் செவ்வாய்க்கிழமை யன்று தமிழகத்துக்கு வந்துள்ளன. இவற்றைச் சேர்த்து மொத்தம் 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழகத்துக்கு இதுவரை 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. 60 லட்சம் டோஸ் வரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 7.8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கின்றன.கோவாக்சின் தடுப்பூசி தற்போது தட்டுப்பாடின்றிப் போடப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி கிடைத்தவுடன் முதலாவது டோஸ் உடனடியாகப் போடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;