tamilnadu

img

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 13,320 வழக்குகள் பதிவு!

சென்னை, ஏப்.20-
சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 13,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 19ஆம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 13,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

;