tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 11,681பேருக்கு கொரோனா தொற்று; 53 பேர் பலி!

சென்னை, ஏப்.21-
தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் இன்று புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று 53 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,258 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று 7,071  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,27,440 பேர் குணமடைந்துள்ளனர்.

;