tamilnadu

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு கடலூர் மாவட்டம் 20வது இடம்

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு  கடலூர் மாவட்டம் 20வது இடம்

கடலூர், மே 16- 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டம் 94.52 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் 20வது இடமும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் 14 வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில், 438 பள்ளிகளில் பயின்ற 17044 மாணவர்கள், 15,417 மாணவிகள் உட்பட மொத்தம் 32461 பேர் எழுதினர். இந்நிலையில் வெள்ளியன்று தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 882 மாணவர்களும், 14 ஆயிரத்து 796 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.  இது 94.51 விழுக்காடு தேர்ச்சி ஆகும். இதில் மாணவர்கள் 93.18 விழுக்காடு, மாணவிகள் 95.97 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் 14ம் இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்த்து சதவீதத்தில் கடந்தாண்டு 19ம் இடத்தில் இருந்த கடலூர் மாவட்டம் தற்போது 20ம் இடத்திற்கு சென்று விட்டது.