tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 நாள் வேலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.  மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, சிபிஎம் வட்டச் செயலாளர் இ.லாரன்ஸ், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.வசந்தா,  வட்டச் செயலாளர் சிவலிங்கம்,  பொருளாளர் லோகநாதன், நிர்வாகி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.