tamilnadu

சிஏஏ-வை கால் வைக்க விடமாட்டோம்!

சென்னை, ஜன. 31 - சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act - CAA) தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள் ளார். ஒன்றிய பாஜக அரசானது, கடந்த 2019 டிசம்பரில் இஸ்லாமியர்களை ஒதுக்கி வைக்கும் வகையில் மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த சட்ட மசோதா-வை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 2020 ஜனவரி 1 முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வருவ தாக இருந்த நிலையில்,  விதிமுறை களே வகுக்கப்படாத காரணத்தால் அது நடக்கவில்லை.  

ஆனால், சில நாட்களுக்கு முன்பு, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்குர், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஒரு  வாரத்திற்குள் மேற்குவங்கம் மட்டு மல்லாமல் நாடு முழுவதும் அமல்படு த்தப்படும்” என பேசி பரபரப்பை ஏற்படு த்தினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தான் “சிஏஏ  சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவிள் துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  அதில், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழு வதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார், பாஜக-வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந் தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த  உடனே சிஏஏ-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மா னமே நிறைவேற்றினோம். தமிழ்நாட் டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடை முறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அர சின் நாசகரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுக-வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு  மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!” என குறிப்பிட்டுள்ளார்.