tamilnadu

img

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கமல்தான் என்பவரது மகள் அனுஷியா (17). சென்னை சேத்பட் எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நீட் தேர்வில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 40% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி அனுஷியாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் சென்று சந்தித்தார். 

;