tamilnadu

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இது போல கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் நடக்கும்3வது வெடி விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;