tamilnadu

img

மானாமதுரை வைகையாற்றை தூய்மைப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்....

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதனால் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் வீரபாண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மனுவில், “மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில்   ஏப். 17ஆம் தேதிசித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.  பத்து தினங்கள் தினம் தோறும் வைகை ஆற்றுக்குள் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெறும். திருவிழா தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆற்றை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டுமென” கூறியுள்ளார்.

;