tamilnadu

img

போராட்டக் களத்தில் மயங்கி விழுந்த மாணவர்.... சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பதற்றம்....

சிதம்பரம்:
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி போராட்டக் களத்தில் மாணவர் ஒருவர் மயங்கி விழுந்தும் கல்லூரி நிர்வாகமும் அரசும் கண்டுக்கொள்ளாததால் பதற்றம் நீடிக்கிறது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 46 நாட்களாக தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வலியுறுத்தி தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு மற்றும் பல் கலைக்கழக நிர்வாகம் விடுதியில் உணவு, மின்சாரம், குடிநீர் வழங்குவதை நிறுத்தியுள்ளது.  இதனால் மாணவர்கள் விடுதி வாயிலில் வாலியுடன் அமர்ந்து குடிநீர், மின்சாரம், அடிப்படை தேவையை கேட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி  வளாகத்திற்குள் வெளியிலிருந்து உணவு எடுத்து வருவதை கல்லூரி நிர்வாகம் தடுத்தது.  இதனை ஏன் தடுக்கிறீர்கள் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது முதுநிலை மாணவர் அசாருதீன் என்பவர் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.  அவரைசக மருத்துவ மாணவர்கள் மீட்டு சென்று போராட்டக்களத்தில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் பல் கலைக்கழக மருத்துவக் கல்லூரி வளாகம் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.

இந்த நிலையில் சிஐடியு ஆட்டோ சங்க கடலூர் மாவட்டத் தலைவர் முத்து தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சிஐடியு சங் கத்தினர் போராட்டக் களத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்களின் போராட்டத்தை அனைத்து கிராம பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் நகரம் மற்றும் மற்ற அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத் தப்படும் என அறிவித்துள்ளனர். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பால.அறவாழி போராட்டக்களத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார் பில் மாணவர்களுக்கு ஆதரவுதெரிவித்து பல்கலைக்கழகத் திற்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி வளாகம் பதற்றமான சூழ்நிலையை மேற்கொண்டு வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக எடுக்கும் நடவடிக்கைகள் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கிவிடும் சூழல் உள்ளது என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். இனிமேலாவது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு என்கின்றனர்.

;