லக்னோ,டிச.20- உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழ்ந்த மர்ம சாமியார் கும்னாமி பாபா, சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கிடையாது என்று நீதிபதி சஹாய் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் நேதாஜி சென்ற விமா னம், தைவான் அருகே 1945 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கியது. இதில் நேதாஜி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் நம்பவில்லை. அயோத்தியில் வாழ்ந்து 1985 ஆம் ஆண்டு இறந்த கும்னாமி பாபாதான், நேதாஜி என தெரிவித்தனர். இதுகுறித்து சஹாய் ஆணை யம் விசாரணை நடத்தி 2017ஆம் ஆண்டில் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை, உத்தரப்பிர தேச சட்டமன்றத்தில வியாழ னன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கும்னாமி பாபா, நேதாஜி கிடையாது. அவர் நேதாஜி யின் ஆதரவாளர், நேதாஜியை போன்ற குரலை கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.