tamilnadu

img

எம்.ரெட்டியபட்டி அரசு மருத்துவமனைக்கு சிபிஎம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்...

திருச்சுழி: 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியபட்டியில் உள்ள  மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செய லாளர் தங்கம், ஜோதி ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன், ஒன்றிய செயலாளர் பி.அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகிகள் செந்தில், பாரதி ஆகியோரிடம் வழங்கினார். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;