உதகை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க
மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்
உதகையில் கோடை சீசன் தொடங்கி யுள்ள நிலையில், போக்குவரத்து நெரி சலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றிய மைக்கப்பட உள்ளதாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், புதனன்று தனி யார் ஆடை நிறுவனம் ஒன்று சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிழற்குடைகள் மற்றும் தடுப்புகளை நீலகிரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் என்.எஸ். நிஷா முன்னிலை யில் போக்குவரத்து காவல்துறையினரிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய எஸ்.பி. நிஷா, “நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், போக்குவரத்து நெரி சலை திறம்படக் கையாளவும், சுற்றுலாத் தலங்களுக்கு இயக்கப்படும் சுற்றுப் பேருந்து களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே மாதம் 1 ஆம் தேதி முதல் குன் னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன் படி, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக வும், உதகை நோக்கி வரும் வாகனங்கள் குன் னூர் வழியாகவும் திருப்பி விடப்படும்,”. மேலும், ஈஸ்டர் பண்டிகை மற்றும் பள்ளி களுக்குத் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக் கும் பட்சத்தில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதலே ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்துவதற்கான ஆயத்தப் பணி களை காவல்துறையினர் மேற்கொண்டு வரு வதாகவும் அவர் குறிப்பிட்டார். சமவெளிப் பகுதிகளிலிருந்து குன்னூர் வழியாக உதகை வரும் சுற்றுலாப் பேருந்து கள் புதிய ஆவின் பாலகம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்திலும், கேரளம் மற் றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து கூடலூர் வழியாக வரும் சுற்றுலாப் பேருந்துகள் எச்.பி.எஃப் பகுதியிலும் நிறுத் தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வும், சுற்றுலாத் தலங்களில் குற்றச் சம்பவங் கள் ஏதும் நிகழாமல் தடுக்கவும் காவல்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்,” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உறுதியளித்தார்.