மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவன் வெற்றி பெற்றுள்ளார்.
கோவை – ஆத்துப் பொள்ளாச்சி அருகே பழங்குடியின இந்து முடுகர் வகுப்பைச் சேர்ந்த மாணவரான ராதாகிருஷ்ணன் (வயது 19) நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்பொழுது, தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து, தற்போது 406 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். என் மருத்துவ கனவு கைகூடும் என்று நம்புகிறேன். நீட்தேர்வு கண்டு மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. முனைப்புடன் படித்தால் வெற்றி மிகவும் எளிமையானது என்றார்.