tamilnadu

img

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் முழக்கம்

அரசு போக்குவரத்து கழகத் தில் ஒப்பந்த முறை, தனியார்மய நட வடிக்கையை கைவிட வேண்டும்,  என வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண் டும். 2023 ஆம் ஆண்டு அக்.1 முதல்  ஒப்பந்த அரியர்ஸ் வழங்க வேண் டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே  வழங்க வேண்டும். பழைய பென் சன் திட்டத்தை அமலாக்க வேண் டும். ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் களை உடனடியாக வழங்க வேண் டும். ஓய்வூதியர்களுக்கு டிஏ  உயர்வை முழுமையாக வழங்க  வேண்டும். 30 ஆயிரம் காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறை, தனி யார்மய நடவடிக்கைகளை கைவிட  வேண்டும். போக்குவரத்து கழகங் களை பாதுகாக்க மினி பேருந்து களை அரசே இயக்க வேண்டும். ஒப் பந்த அடிப்படையில் பேருந்து களை வாடகைக்கு எடுத்து இயக் கும் முடிவை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி உள் ளிட்ட போக்குவரத்து ஊழியர் சங் கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி போக்குவரத்து கழக  பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு போக்குவரத்து கழக  ஊழியர் சங்க மண்டலத் தலைவர் சி. முரளி தலைமை வகித்தார். மண் டல பொதுச்செயலாளர் எஸ்.சண் முகம், துணைத்தலைவர் சி.ரகுபதி,  பொருளாளர் ப.சுவராஜ், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், ஏஐடியுசி போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ரவி, மாநில துணை பொதுச்செய லாளர் முருகராஜ், மண்டல பொதுச் செயலாளர் நாகராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், ஏஐடியுசி நிர்வாகி கோவிந்த ராஜ் நன்றி கூறினார். சேலம் சேலம் ராமகிருஷ்ணா சாலை யிலுள்ள போக்குவரத்து தலைமை  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு போக் குவரத்து ஊழியர் சங்க மண்டலப்  பொருளாளர் சேகர் தலைமை வகித்தார். இதில் மண்டல பொதுச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநில  துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் சிஐடியு அரசு விரைவு போக் குவரத்து தொழிற்சங்க மாநில  துணை பொதுச்செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்றோர்  சங்க நிர்வாகிகள் மணிமுடி, கலைச் செல்வன், ஏஐடியுசி பொருளாளர்  பொன்னுசாமி, துணைத்தலைவர் தனசேகர், டிடிஎஸ்எப் மாநில  பொதுச்செயலாளர் செந்தில் குமார், தலைவர் மனோகரன் உட் பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை, சுங்கம் பணிமனை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஏஐசிசிடியு நிர்வாகி கே. செல்வராஜ் தலைமை வகித்தார்.  இதில், சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத் தலைவர்  எம்.பரமசிவம், பொதுச்செயலாளர்  எம்.வேளாங்கண்ணி ராஜ், சம்மே ளன துணை பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், டிடிஆர்எஸ்டி தலை வர் கே.குப்புசாமி, டிடிஎஸ்எப் தலைவர் சி.ஜெயதிலகன், மண்ட லப் பொருளாளர் எம்.நடராஜ்,  ஏஐடியுசி மண்டல பொதுச்செய லாளர் எஸ்.அண்ணாதுரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி  எம்.அருணகிரிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், டிடிஎஸ்டி தலைவர் சி.ஜெயதி லகன் நன்றி கூறினார்.